Monday, September 19, 2011

எதிரிகளை காட்டிக் கொடுக்கும் கண்ணாடி


எதிரிகளை காட்டிக் கொடுக்கும் கண்ணாடி
[ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 03:53.09 பி.ப GMT ]
பெண்களின் பேச்சை பெரும்பாலான நேரம் புரிந்து கொள்ள முடியாது. நண்பன் என்று நம்பிக் கொண்டிருப்பவர் பக்கத்திலேயே குழி வெட்டிக் கொண்டிருப்பார்.
இது போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு எச்சரிக்கும் மூக்கு கண்ணாடியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
மூளை மற்றும் நரம்புகளின் ஒருவித பாதிப்பு ஆட்டிசம் எனப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் நெருங்கி பேச முடியாமல், பழக முடியாமல் சிரமப்படுவார்கள். சமூகத்தில் இருந்து சற்று விலகியே இருப்பார்கள்.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், பேச வருகிறார்கள் என்பதை அவர்களால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாது. இந்த குறைபாட்டை நீக்கும் வகையில் அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநில தொழில்நுட்ப கல்லூரி(எம்.ஐ.டி) தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
தற்பொழுது அவர்கள் எக்ஸ்ரே மூக்கு கண்ணாடியை உருவாக்கி வருகின்றனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: நமது மூளை நன்றாக செயல்படும் பட்சத்தில் அடுத்தவர்களின் முக பாவத்தை வைத்து என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களால் இவ்வாறு உணர முடியாது. அவர்களுக்கு வசதியாக மூக்கு கண்ணாடியை உருவாக்கி வருகிறோம். இதில் அரிசி அளவே உள்ள கமெரா பொருத்தப்பட்டுள்ளது. இது பாக்கெட் அளவு கணணியுடன்(பிராசசர்) இணைக்கப்பட்டிருக்கும்.
மனிதர்களின் 24 விதமான முக பாவங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒருவருடன் பேசுகிறோம் என்றால் இந்த எக்ஸ்ரே கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். அவரது முகத்தில் ஏற்படும் சிறு அசைவுகள், சுருக்கங்கள் ஆகியவற்றை கண்ணாடியில் இருக்கும் கமெரா கண்காணித்துக் கொண்டே இருக்கும். நேரில் எதிராளி சிரித்தாலும்கூட அவரது முகத்தில் ஏற்படும் துல்லிய அசைவுகளை வைத்து அவரது மனோபாவத்தை பிராசசர் கணக்கிடும்.
அவரிடம் பாசிட்டிவ் உணர்வுகள், முகபாவங்கள் தென்பட்டால் கண்ணாடியின் உள் பகுதியில் இருக்கும் சிக்னலில் பச்சை விளக்கு எரியும். தொடர்ந்து பேசலாம், ஆபத்தில்லை என்று புரிந்துகொள்ளலாம்.
அவர் நமக்கு ஆதரவானவர் அல்ல என்றாலோ, இனிக்க இனிக்க பேசி வேட்டு வைக்கிறார் என்றோ தெரியவந்தால் இந்த சிக்னலில் மஞ்சள், சிவப்பு விளக்கு எரியும். உஷாராகி பேச்சை நிறுத்திக் கொள்ளலாம்.
எதிராளி எந்த நோக்கத்தில் பேசுகிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும். "உஷாரா பேசு" என்று பிரத்யேக ஸ்பீக்கர் மூலம் காதுக்குள் எச்சரிக்குமாறும் வடிவமைத்துக் கொள்ளலாம்.
கண்ணாடி வடிவமைப்பு பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது. தற்போதைய அளவில் கண்ணாடி 64 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுகிறது. உரிய மாற்றங்கள் செய்த பிறகு கண்ணாடி அறிமுகமாகும்.

தரைக்கு கீழே உள்ள மின்சாரத்தை பயன்படுத்தி செயல்படும் வாகனம் தயாரிப்பு


தரைக்கு கீழே உள்ள மின்சாரத்தை பயன்படுத்தி செயல்படும் வாகனம் தயாரிப்பு
[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 03:36.16 பி.ப GMT ]
தரைக்கு கீழே பதிக்கப்பட்ட மின்கம்பிகளில் இருந்து மின்காந்த தூண்டுதல் மூலமாக மின்சாரத்தை உறிஞ்சி ஓடும் டிராம் வண்டி தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தென்கொரிய தலைநகர் சியோலில் "சியோல் கிராண்ட் பார்க்" என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. ராட்சத ராட்டினம், ஹொட்டல், நீச்சல் குளம் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
பூங்காவை சுற்றிப் பார்க்க டீசல் ரயில் இயக்கப்பட்டு வந்தது. டீசலுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தில் மின்சார ரயில் இயக்குவது குறித்து கொரியா அறிவியல், தொழில்நுட்ப கழகம் ஆய்வு நடத்தியது. மின்காந்த தூண்டுதல் முறையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த தொழில்நுட்பத்தில் இயங்குவதற்கான வாகனங்கள் உருவாக்கும் பணி கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இதற்கு ஓன்லைன் எலக்ட்ரிக் வீக்கிள்(ஓஎல்இவி) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த டிராம் வண்டிக்கு தண்டவாளம் தேவையில்லை. 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட இது கார் போலவே ஓடும். பூங்கா முழுவதும் டிராம் செல்லும் தடத்தில் அடையாளத்துக்காக நீல நிற கோடு போடப்பட்டிருக்கும்.
இந்த கோட்டுக்கு நேராக தரைக்கு கீழே சுமார் ஒரு அடி ஆழத்தில் மின்சார கம்பிகள் செல்லும். அந்த வழியாக செல்லும் போது மின்காந்த தூண்டுதல் விசையை பயன்படுத்தி மின்சாரத்தை வாகனம் நேரடியாக உறிஞ்சிக் கொள்ளும். இதன்மூலம் இன்ஜின் இயக்கப்படும்.
இதுபற்றி பொறியிலளார்கள் கூறுகையில்,"பாதாள மின்கம்பியானது உயர் அழுத்த மின் கம்பியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனால் மின்சாரம் எப்போதும் தடைபடாது. மின்காந்த தூண்டுதல் முறையில் மின்சாரம் உறிஞ்சப்படுவதால் மின் இழப்பு அவ்வளவாக இருக்காது. சொற்ப அளவே புகை வெளியாகும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது" என்றனர்.
பூங்காவில் இந்த வாகனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் டாப் 50 கண்டுபிடிப்புகளில் ஓஎல்இவி ஒன்று என்று டைம்ஸ் இதழ் கவுரவப்படுத்தி விருது அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்


ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்
[ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 09:45.36 மு.ப GMT ]
ஏ.சி வசதியுடன் கூடிய பைக் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விலை ரூ.34 லட்சம்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெரவ்ஸ் என்ற நிறுவனம் கேபினுடன் கூடிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹேண்ட்பார், 2 வீல்கள் ஆகியவை வழக்கமான பைக் போல. உட்கார சற்று அகலமான சீட். வண்டியை நிறுத்தி இறங்கும் போது பேலன்ஸ் தவறாமல் இருக்க சின்னப் பசங்க சைக்கிள் போல இரு புறமும் சப்போர்ட்டுக்கு 2 மினி சக்கரங்கள்.
இடது, வலது எந்த பக்கமும் இறங்கலாம். ஏறி அமர்ந்து கதவை மூடிக்கொண்டால் முன், பின் சக்கரங்கள் மட்டுமே வெளியே தெரியும். பேன்ட்டில் சேறு, சகதி அடிக்கிற இம்சைகள் கிடையாது. முன் பக்கவாட்டு பக்கங்களை பார்க்க பைபர் கண்ணாடி.
எடை சற்று அதிகம் என்பதால் அதற்கேற்ப ரேஸ் பைக் இன்ஜின் பொருத்தியிருக்கின்றனர். ஏ.சி வசதியும் செய்யப்பட்டுள்ளது. மினி கார் அளவுக்கு தரமாக உருவாக்கப்பட்டிருப்பதால் விலை அதிகம். ரூ.34 லட்சம். ‘மோனோடிரேசர்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர்.
சுவிட்சர்லாந்து மட்டுமின்றி பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மோனோடிரேசரை அதிகம் காண முடிகிறது. பைக் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பல நிறுவனங்களும் ஏ.சி பைக் தயாரிப்பு பக்கம் பார்வையை திருப்பியிருக்கின்றன. அவர்களும் களமிறங்கினால் விலை குறையலாம்.

கப்பல்கள் தண்ணீரில் மிதப்பதற்கு காரணம் என்ன?


கப்பல்கள் தண்ணீரில் மிதப்பதற்கு காரணம் என்ன?
[ திங்கட்கிழமை, 29 ஓகஸ்ட் 2011, 01:31.15 பி.ப GMT ]
ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல் தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு.
சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களுக்கும் அதிக எடை கொண்டவை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும் போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.
10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் "டிஸ்பிளேஸ்மென்ட் 10" ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.
அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன்றையொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன.
செங்குத்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடையை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதாக ஆக்கிமிடிஸ் கருதினார். காற்றில் அமிழ்ந்துள்ள பொருட்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும்.
கியாஸ் உள்ளிட்ட எல்லா திரவங்களுக்கும் ஆக்கிமிடிஸின் கொள்கை பொதுவானதே. உதாரணமாக பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனுக்குச் சமமான எடையை விட இலேசாக இருந்தால் பறக்கும்.

2013ம் ஆண்டில் விண்வெளிக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம்: பணிகள் தீவிரம்


2013ம் ஆண்டில் விண்வெளிக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம்: பணிகள் தீவிரம்
[ வியாழக்கிழமை, 08 செப்ரெம்பர் 2011, 03:16.42 பி.ப GMT ]
விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துப் போவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்காவில் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
விண்கலங்கள் புறப்பட்டு செல்வதற்கான ஸ்பேஸ் போர்ட் அமைக்கும் வேலை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டது வர்ஜின் குழுமம். இது விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதற்காக "வர்ஜின் கேலக்டிக்" என்ற தனி நிறுவனத்தை தொடங்கியிருக்கிறது.
விண்வெளி சுற்றுலா திட்டம் 2013ல் தொடங்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள லாஸ் க்ரூசஸ் பகுதியில் பிரமாண்ட "ஸ்பேஸ் போர்ட்" அமைக்கப்பட்டு வருகிறது.
1800 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமாக ஸ்பேஸ் போர்ட் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுபற்றி ஸ்பேஸ் போர்ட் அதிகாரிகள் கூறியதாவது: விண்கலங்கள் புறப்படும் இடம் என்பதால் 3 கி.மீ. நீள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா செல்லும் விண்கலத்துடனான தொடர்பை தொடர்ந்து கண்காணிக்கும் தரை கட்டுப்பாட்டு மையமும் இந்த வளாகத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகள் இந்த ஆண்டு கடைசிக்குள் முடிந்துவிடும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 2013ல் விண்வெளி சுற்றுலா திட்டம் தொடங்கப்படும். சுற்றுலா வாகனம் "ஸ்பேஸ்ஷிப்-2" சோதனை பலகட்டமாக நடந்து வருகிறது.

குளோனிங் முறையில் முதன் முதலாக பூனைகள் உருவாக்கம்


குளோனிங் முறையில் முதன் முதலாக பூனைகள் உருவாக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 13 செப்ரெம்பர் 2011, 12:26.02 பி.ப GMT ]
உலகில் முதன் முறையாக குளோனிங் முறையில் ஆடுகள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது பூனைகள் உருவாகியுள்ளன.
அமெரிக்காவில் மின்னெ சோபாவில் உள்ள மயோ கிளினிக் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் இச்சாதனை படைத்துள்ளனர். இது மனிதர்களை தாக்கும் உயிர்க்கொல்லியான "எய்ட்ஸ்" நோய்க்கு இணையானதாகும்.
இந்த பூனைகளின் பச்சை நிறம் ஒளிரும் ஜெல்லி மீன்களில் இருந்து எடுத்து செலுத்தப்பட்ட மரபணுவாகும். இதுதான் பூனைகளின் உடலில் பச்சை நிறத்திலான புரோட்டீனை உருவாக்கி ஒளிர செய்கின்றன.
இந்த பூனைகள் மரபணு மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள பெரும்பாலான மரபணு குரங்கில் இருந்து எடுத்து செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு டிரிம்ஷிப் என்று பெயர். இவை விலங்குகளை தாக்கும் எப்.ஐ.வி எனப்படும் வைரஸ் தொற்றுநோயில் இருந்து இவற்றை பாதுகாக்கும்.
குளோனிங் முறையில் 3 பூனைகள் பிறந்துள்ளன. அவற்றுக்கு டிஜிகேட் 1, டிஜிகேட் 2, டிஜிகேட் 3 என பெயரிட்டுள்ளன. அவை பச்சை நிறத்தில் உள்ளன. இந்த ஆராய்ச்சியின் மூலம் மனிதர்களை எய்ட்ஸ் நோயில் இருந்து காப்பாற்றும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பூனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள மரபணுக்களால் அவற்றுக்கு எப்.ஐ.வி வைரஸ் நோய் தாக்கும் வாய்ப்பு இல்லை. அதுபோன்று எச்.ஐ.வி வைரஸ் கிருமிகளில் இருந்து மனிதர்களை பாதுகாக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.

வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளும் இணையம்


வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளும் இணையம்
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 10:24.47 மு.ப GMT ]
சோர்பஸ்டர் இணையதளத்தை நிச்சயம் பெண்கள் விரும்புவார்கள்.அதிலும் இல்லத்தலைவிகள் கூடுதலாக விரும்புவார்கள்.
காரணம் சோர்பஸ்டர் வீட்டு வேலைகளையை திட்டமிடவும் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வேலைகளை திட்டமிட்டு பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
இதற்கெல்லாம் ஒரு இணையதளமா? என்று ஆச்சர்யப்பட்டாலும் சரி அல்லது இது போன்ற ஒரு தளத்தை வீட்டு வேலைகளை திட்டமிடுவதை எளிமையாக்கும் தளத்தை தான் எதிர்பார்த்தேன் என்று மகிழ்ச்சி அடைந்தாலும் சரி, சோர்பஸ்டர் இனிமையான இணையதளம் தான்.
ஒவ்வொரு வீட்டிலும் தான் எத்தனை விதமான வேலைகள் இருக்கின்றன. பாத்திரம் துலக்குவது, துணி மணிகளை துவைப்பது, வீட்டை தூய்மையாக்குவது, உணவு தயார் செய்வது, தோட்ட செடிகளுக்கு தண்ணிர் ஊற்றுவது, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது என வீட்டுக்கு வீடு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன.
வேலைகள் எத்தனை இருந்தாலும் சரி அவற்றை நிர்வகிக்கும் பொருப்பு அநேகமாக இல்லத்தலைவியின் தலையில் தான். நிர்வகிப்பு என்பதற்கு செய்து முடிப்பது என்றும் வைத்து கொள்ளலாம்.
வேலைகளை பிரித்து கொடுக்க நினைத்தாலும் அம்மாவோ, மனைவியோ ஒன்று குடுமப உறுப்பினர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டும் அல்லது அதட்டி கொண்டிருக்க வேண்டும். இல்லை ஒருவரும் வேலையை பகிர்ந்து கொள்வதில்லை என்று புலம்பி கொண்டிருக்க வேண்டும்.
இதற்கு மாறாக அழகாக சார்ட் போட்டு வீட்டு வேலைகளை பட்டியலிட்டு யார் யார் எந்த வேலையை செய்ய வேண்டும் என்று குறிப்பிட முடிந்தால் எப்படி இருக்கும். அதை தான் சோர்பஸ்டர் செய்கிறது.
இந்த தளத்தின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீட்டில் உள்ள வேலைகளை அட்டவனை போட்டு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு முதலில் உறுப்பினராக சேர வேண்டும் .அதன் பிறகு இரண்டு விதமாக வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள துவங்கலாம்.
முதலில் வீட்டில் உள்ள வேலைகளை பட்டியலிடலாம். வேலைகள் என்னும் பகுதியில் கிளிக் செய்து அதில் ஒவ்வொரு வேலையாக சேர்த்து கொண்டே இருக்கலாம்.
அடுத்த வேலை இந்த வேலைகளை வீட்டில் உள்ளவர்களுக்கு பிரித்து தருவது தான். இதற்காக நபர்கள் என்னும் பகுதியில் கிளிக் செய்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேர்த்து அவர்களுக்கான வேலைகளை ஒதுக்குவது தான்.
உதாரணத்திற்கு காலை உணவுக்கு பின் பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைக்கலாம். காய்கறிகள் வாங்கி வரும் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைக்கலாம்.
எல்லா வேலைகளையும் பட்டியலிட்டு எல்லாவற்றையும் பிரித்து கொடுத்த பின் இந்த அட்டவணையை அச்சிட்டு வைத்து கொள்ளலாம். இந்த அட்டவணையின் படி வேலைகளை செய்து முடிக்க வற்புறுத்தலாம். மின்னஞ்சல் மூலம் வேலைகளை நினைவூட்டலாம். இந்த அட்டவணையை கொண்டே வேலைகளை செய்து முடித்துள்ளனரா என்று சரி பார்க்கலாம்.
எப்போது வேண்டுமானாலும் புதிய வேலைகளை சேர்க்கலாம், வேலையை மாற்றி தரலாம். ஒவ்வொரு கட்டத்திலும் கணித அட்டவனை போல கூடுதல் அம்சங்கள் எட்டிப்பார்ப்பது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.ஆனால் உண்மையில் இந்த அம்சங்களே மிகவும் சுவாரஸ்யமானவை. பயனுள்ளவை.
உதாரணத்திற்கு ஒரு வேலையை குறிப்பிட்ட பின் அந்த வேலை கடினமானதா, எளிதனாதா, மிகவும் எளிதனாதா போன்ற அம்சங்களை குறிப்பிட வேண்டியிருக்கிறது. அதே போல அந்த வேலையை தினமும் செய்ய வேண்டுமா அல்லது வாரத்தில் எந்த நாளில் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
முதல் பார்வைக்கு இந்த அம்சங்கள் என்னட இது வேலையை ஒதுக்குவதே வேலையாக போச்சே என்று அலுத்து கொள்ள வைக்கலாம். ஆனால் பழக பழக இந்த அம்சங்கள் திட்டமிடலை நியாமானதாகவும் சுவாரஸ்யமாகவும் மேற்கொள்ள என்பது புரிந்துவிடும்.
காரணம் கடினமான வேலைகளை ஒருவர் தலையிலே கட்டிவிடக்கூடாது அல்லவா? அதே போல வேலைகளை செய்பவர்கள் அவற்றின் தன்மையை உணர்ந்திருப்பது நல்லது தானே. அது மட்டும் அல்ல வேலைகளுக்கு பரிசு பொருளும் கொடுத்து கொள்ளலாம் என்பதால் இந்த மதிப்பீடு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
அதே போல அதிக வேலை செய்பவர்களுக்கு சில நாட்கள் எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கலாம்.முக்கிய வேலைகள், தினசரி வேலைகள் என்றும் வகைப்படுத்தி கொள்ளலாம். வேலைகளை டைப் செய்யும் போதே அவற்றின் வகைகள் தோன்றிவிடுகின்றன. அவற்றில் இருந்து அப்படியே தேர்வு செய்து கொள்ளலாம்.
கணவன் மனைவி இரண்டு பேர் கோன்ட குடும்பம் முதல் கூட்டு குடும்பம் வரை இந்த சேவையை பயன்படுத்தி வீட்டு வேலைகளை பிரித்து கொள்ளலாம். அறை எடுத்து தங்கியிருக்கும் நண்பர்கள் கூட தங்களுக்குள் இப்படி வேலைகளை பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் மற்றொரு சிறப்பம்சம் இதன் சமுக தன்மை.அதாவது இதில் உள்ள மற்ற உறுப்பினர்களின் வேலை அட்டவணையை பார்த்து பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. மற்ற குடும்பங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வதை பார்ப்பதன் மூலம் வீடு வேலையை பகிர்தலுக்கு தேவையான ஊக்கத்தை பெறலாம்.
வேலைகள் பகிர்தல் குறித்த புதிய வழிகளையும் கற்று கொள்ளலாம். அவர்களோடு தொடர்பு கொண்டும் பேசலாம். நட்பை வளர்த்து கொள்ளலாம். வேலைக்கான வழிகளை பரிமாறிக் கொள்ளலாம்.
இந்த தளத்தின் இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது குறித்து ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டும் குறிப்புகள் இடம் பெறுவது தான்.வீட்டு வேலைகலை ஜனநாயகமயமாக்கும் சூப்பர் தளம்.

மின்னஞ்சல் முகவரியை பாதுகாக்க சில வழிகள்


மின்னஞ்சல் முகவரியை பாதுகாக்க சில வழிகள்
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 04:35.50 மு.ப GMT ]
இன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தும் வழிகளில் ஒன்று மின்னஞ்சல்.
அவர்கள் ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை பாதுகாக்க ஒரு சில வழிகள் உண்டு.
1. உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வேறு தளங்களில் பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்ய விரும்பினால் username@gmail.com என்பது போல கொடுக்காமல் படமாகவோ(images) வேறு விதமாகவோ கொடுக்கலாம்.
உதாரணத்திற்கு username[at]gmail.com. ஏனெனில் இணையத்தில் பரவிக் கிடக்கும் மின்னஞ்சல் முகவரிகளை சேகரிப்பதற்காகவே நிறைய மென்பொருள்கள் இருக்கின்றன. அவைகள் @ என்பதற்கு முன்னும், பின்னும் வார்த்தைகள் இருந்தால் அதனை மின்னஞ்சல் முகவரி என்பதை கணித்து சேகரிக்கும்.
2. சில தளங்களில் Newsletterல் சேருமாரும் அல்லது சில கோப்புக்களை பதிவிறக்கம் செய்ய மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும் சொல்லும். அவற்றில் கொடுக்கும் முன் அந்த தளம் நம்பகமானது தானா? என பார்த்து கொடுக்கவும். ஏனெனில் சில தளங்கள் அவ்வாறு சேகரித்த தகவல்களை மற்றவர்களுக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.
3. Gmail, Yahoo போன்றவற்றை கைத்தொலைபேசிகளில் பயன்படுத்துவதற்காக Nimbuzz, Fring போன்ற கைத்தொலைபேசிகளுக்கான மென்பொருள்கள் அதிகம் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்த வேண்டுமெனில் நாம் கூகிள், யாஹூ ஆகியவற்றின் Username, Passwordஐ கொடுக்க வேண்டும்.
இப்படி கொடுப்பதினால் எந்நேரமும் நமது கணக்கு திருடப்படலாம். எந்த நிலையிலும் இது போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தாதீர்கள்.
4. சில சமயங்களில் நமக்கு வித்தியாசமான மின்னஞ்சல்கள் வரும். நமக்கு லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகவும், நமது மின்னஞ்சல் முகவரிக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் மின்னஞ்சல்கள் வரும்.
சில சமயம் ஆபாசகவும் மின்னஞ்சல்கள் வரும். அது போன்ற மின்னஞ்சல்களை உடனே அழித்துவிடுங்கள். அது போன்ற மின்னஞ்சல்கள் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும். அப்படி நாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். பிறகு நமது பணம் களவாடப்படும்.
5. ப்ரவ்சிங் சென்டர்களுக்கு சென்று மின்னஞ்சல்களை பார்ப்பதாக இருந்தால் "Keep Me signed in", "Keep me logged in" என்பதில் டிக் செய்யாமல் உள்நுழையவும். மின்னஞ்சல்களை பார்த்துவிட்டு வெளிவரும் போது Sign Out செய்ய மறவாதீர்கள்.

இணையதளங்களை சோதிப்பதற்கு


இணையதளங்களை சோதிப்பதற்கு
[ சனிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2011, 04:48.35 மு.ப GMT ]
இன்றைய இணையதளங்களில் எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் கொண்ட புரோகிராம் இருக்கும் என நம்மால் கண்டறிய முடியவில்லை.
பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கணணிக்குள் அனுப்பி விடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஓர் இணைய தளம் இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது.
இதற்கென http://safeweb.norton.com/ என்ற முகவரியில் தளம் ஒன்றை அமைத்துள்ளது. இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே கொப்பி செய்து அதற்கான இடத்தில் பேஸ்ட் செய்திடலாம் அல்லது நாமாக டைப் செய்து அமைக்கலாம்.
சோதனை செய்து முடிவுகளைக் காட்ட பொக்ஸ் அருகே உள்ள லென்ஸ் படத்தில் கிளிக் செய்தால் அல்லது என்டர் அழுத்தினால் சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
இந்த பாதுகாப்பு நிலை தகவல்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன. 1) மிக மோச எச்சரிக்கை - சிகப்பு வண்ண பட்டன். 2) எச்சரிக்கை - சிகப்பு வண்ண ஆச்சரியக் குறி. 3) பாதுகாப்பானது - பச்சை நிற செக் குறியீடு. 4) சோதனையிடப்படவில்லை - சாம்பல் வண்ணத்தில் கேள்விக் குறி.
அறிக்கையில் மொத்த தளம் குறித்த பாதுகாப்பு தன்மை கூறப்படுகிறது. வர்த்தக ரீதியில் இல்லாத தளம் என்றால் பொதுவான பாதுகாப்பு நிலை தரப்படுகிறது.
அடுத்ததாக, வர்த்தக தளம் எனில் அதனுடன் வர்த்தகம் மேற்கொள்கையில் நமக்கான பாதுகாப்பு எப்படி என்று காட்டப்படுகிறது. அடுத்ததாக பொதுவான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தகவல்கள் உள்ளன.
இறுதியாக என்ன என்ன பயமுறுத்தல்களை இந்த தளம் கொண்டுள்ளது என்று அதிலிருந்து அனுப்பப்படும் கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் பிற புரோகிராம்கள் காட்டப்படுகின்றன.
வலது பக்கத்தில் நீங்கள் சோதனை செய்திடும் தளம் சமுதாய கண்ணோட்டத்தில் எப்படிப்பட்டது என்று காட்டப்பட்டு அந்த தளம் குறித்த கருத்துக்களும் வைக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக இந்த தளத்தினை நமக்குக் காட்டும் பொதுவான குறியீடுகள்(tags) தரப்படுகின்றன.
இறுதியாகச் சொல்லப்பட்ட சமுதாயக் கண்ணோட்ட அறிக்கை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எடுத்துக்காட்டாக யூடியூப் தளம் குறித்து கேட்டபோது மிக நல்ல தரம் கொண்டது எனக் காட்டப்பட்டது.
சமுதாயக் கண்ணோட்ட அறிக்கையில் யூடியூப் தளத்தில் காட்டப்படும் வீடியோ குறித்த தகவல்களில் உள்ள லிங்க்குகள் மோசமான தளத்திற்கு உங்களை எடுத்துச் செல்லலாம் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது.
இப்போதெல்லாம் நீளமான தள முகவரிகளைச் சுருக்கி நமக்குத் தருகின்றனர். இதில் எந்த தளம் மோசமானது என்று நாம் சிறிது கூட எண்ணிப் பார்க்க இயலாது. எனவே நார்டன் தரும் இந்த தளம் நமக்கு நல்ல பாதுகாப்பினை அளிக்கிறது.
30 விநாடிகளில் முழு பாதுகாப்பு குறித்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே அறியாத தளங்களுக்குச் செல்லும் முன் இந்த தளம் சென்று சோதனை செய்து கொள்வது நல்லதல்லவா! 30 விநாடிகள் செலவழித்தால் பின்னர் நாம் அறியாமல் மாட்டிக் கொண்டு துன்பப்பட வேண்டியதில்லையே.

உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு


உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 04:44.33 மு.ப GMT ]
பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன, நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம்.
பேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேவை தான். எளிமையானதும் கூட.
யார் வேண்டுமானாலும் உங்களை பேட்டி காண வழி செய்யும் சேவை என்று பெருமை பட்டு கொள்லும் டைப்காஸ்ட் ஒருவர் தனது ரசிகராலோ நண்பர்களாலோ அல்லது வாசகர்களாலோ பேட்டி காணப்பட வழி செய்கிறது. அதிலும் எப்படி தெரியுமா நேரடி பேட்டிக்கு வழி செய்கிறது.
பேட்டிக்கு நான் தயார் என ஆர்வம் கொள்பவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும். பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் சம்ர்பித்து உறுப்பினரான பின் பேட்டிக்கான பக்கம் அளிக்கப்படுகிறது.
அந்த பக்கத்தில் பேட்டிக்கான தலைப்பு மற்றும் விளக்கத்தை குறிப்பிட்டு பேட்டிக்கு ஆயுத்தமாகலாம். பேட்டி காணப்பட விரும்பும் நேரத்தையும் குறிப்பிடலாம்.(எப்போது வேண்டுமானாலும் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம்).
இதன் பிறகு உங்கள் வலைப்பதிவினிலோ அல்லது பேஸ்புக் பக்கத்துலோ இந்த இணைப்பை சமர்பித்து நண்பர்களையும் வாசகர்களையும் கேள்வி கேட்க அழைக்கலாம். குறிப்பிட்ட நாள் அன்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். கேள்விகளை வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.
வலைபதிவாளர்கள், மாணவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு பயனுள்ள பதிவை எழுதிய பின் அந்த மைய பொருள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். பேட்டியை வலைப்பதிவிலும் இடம் பெறச்செய்யலாம்.
அதே போல குறிப்பிட்ட தலைப்பு குறித்து நண்பர்களோடு கருத்துக்களை பகிர இரும்பினாலும் இதனை பயன்படுத்தலாம். மாணவர்கள் ஆசிரியர்களோடு உரையாடவோ அல்லது ஆசிரியர்கள் மாணவர்களோடு உரையாடவோ இதனை பயன்படுத்தலாம்.
கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கும் எவர் வேண்டுமாலும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். வலைப்பதிவுகளும், டிவிட்டர் போன்ற சாதனங்களும் கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பை எல்லோருக்கும் ஏற்படுத்தி தந்துள்ள நிலையில் டைப்கேஸ்ட் சேவை பதிவர்களும் பேஸ்புக் பயனாளிகளும் பேட்டி காணப்படும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
வலைப்பதிவில் பின்னூட்டம் மூலம் அல்லது பேஸ்புக்கில் கருத்துக்கள் மூலம் உரையாடுவதை விட இப்படி பேட்டி வழியே கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சிறந்ததாக இருக்கும். இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி கொள்ளும் புதுமையான முயற்சி. ஆனால் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை.

ஆலோசனைகளை வழங்கும் இணையம்


ஆலோசனைகளை வழங்கும் இணையம்
[ செவ்வாய்க்கிழமை, 13 செப்ரெம்பர் 2011, 09:25.17 மு.ப GMT ]
வாட் கேன் யூ பை இணையதளத்தை கொஞ்சம் ஜாலியான ஆலோசனை தளம் என்று சொல்லலாம்.
இந்த தளம் ஆலோசனை வழங்குவது என்ன பொருட்களை வாங்கலாம் என்னும் கேள்விக்கான பதிலை தான். சில நேரங்களில் எந்த பொருட்களை வாங்குவது என்ற குழப்பம் ஏற்படும் அல்லவா?
இது போன்ற நேரங்களில் ஆலோசனை சொல்லும் ஷாப்பிங் தளங்கள் இருக்கின்றன.பொருட்களின் விலை, பல்வேறு சிறப்பமசங்கள் உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து இணையவாசிகளின் தேவைக்கேற்ற பரிந்துரைகளை இந்த வகை தளங்கள் வழங்குகின்றன.
ஆனால் இவை எல்லாம் கொஞ்சம் சிரியசானவை. அதாவது உண்மைலேயே ஒரு பொருளை வாங்க விரும்பும் போது எந்த நிறுவனத்தின் பொருளை வாங்குவது என்று தெரியாமல் தவிக்கும் போது இந்த தளங்கள் உதவுகின்றன.
ஆனால் வாட் கேன் யூ பை இணையதளம் இவ்வாறு இல்லை. இந்த தளத்தில் நீங்கள் பொதுவாக குறிப்பிட்ட தொகைக்கு(டொலர்களுக்கு) என்ன வாங்கலாம் என்று கேட்கலாம். இதற்கான தேடியந்திர கட்டம் போல உள்ள பகுதியில் உங்கள் மனதில் உள்ள தொகையை மட்டும் குறிப்பிட்டால் போதும், அந்த தொகைக்கு என்ன பொருட்களை எல்லாம் வாங்கலாம் என்று இந்த தளம் பரிந்துரை செய்கிறது.
இந்த பரிந்துரைகள் உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கின்றன. குறிப்பிட்ட டொலர்களில் என்ன எல்லாம் வாங்கலாம் என்று முன்வைக்கப்படும் பரிந்துரைகள் பலவிதமானதாக இருக்கின்றன. அவை வாங்ககூடிய பொருட்களாக மட்டும் இல்லாமல் செய்யக்கூடிய செய்ல்களாகவும் இருக்கின்றன. சில சுவாரஸ்யமானவை. சில பயனுள்ளவை. சில விளையாட்டானவை.
உதாரணத்திற்கு 3 டொலர்களுக்கு என்ன வாங்கலாம் என்று கேட்டால் முதல் பதிலாக 3 நாளிதழ்களை வாங்கி நண்பர்களுக்கு தொப்பி செய்து பரிசளியுங்கள் என்று சொல்கிறது. அடுத்த பதில் 3 மரக்கன்றுகளை நடுங்கள் என்று சொல்லி அதற்கான இணையதள முகவரியையும் தருகிறது.
நீர்குமுழி பாட்டிலை வாங்கி கொண்டு நண்பர்களை அழைத்து கொண்டு பூங்காவிற்கு சென்று சிறுவனை போல விளையாடி மகிழுங்கள் என்பது மூன்றாவது பரிந்துரை. ஐஸ்லாந்தின் நாணயமான கூரோனாவில் 347 குரோனாவிற்கு மாற்றி கொள்ளுங்கள் மற்றும் ஹாங்காங்கில் 0.0004 சதுர அடி நிலத்தை வாங்கி கொள்ளுங்கள் என்னும் அடுத்த இரண்டு பரிந்திரைகள் சுவாரஸ்யமாக இருப்பதோடு புதிய தகவல்களை தெரிவிப்பதாகவும் இருக்கின்றன.
ஆக மூன்று டொலருக்கு வாங்க கூடிய பொருட்களை பட்டியலிடமால் மூன்று டொலரில் சாதியமாக கூடிய விஷயங்களை முன் வைப்பது தான் இந்த தளத்தின் சுவாரஸ்யமே. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த பட்டியலை பார்த்தவுடன் தேவை என்றால் இன்னொரு பட்டியல் தேவை என்று சொல்லலாம்.
அப்போது 3 டொலருக்கு இந்தியாவில் சினிமா டிக்கெட் வாங்கலாம், வியட்னாம் நாணயத்தில் 58824ம் டாங்குகள் பெறலாம், ஏழைகளுக்கு கொடுத்து விடலாம் என்பது உட்பட புதிய பரிந்துரைகள் வந்து நிறகின்றன. மீண்டும் கிளிக் செய்தால் மற்றொரு பட்டியல் வருகிறது.
இதெல்லாம் தேவையா என்று தோன்றலாம். ஆனால் பலருக்கு இவை சுவாரஸ்யம் அளிக்கலாம். ஒருவிதத்தில் பார்க்கப்போனால் நுகர்வு கலாச்சாரம் மிதான நகைச்சுவையான விமர்சனமாக கூட இதனை கருதலாம். எல்லாவற்றையுமே பணத்தையும் அதற்கான மதிப்பையும் கொண்டு தான் பார்க்க வேண்டுமா என்ன?
குறிப்பிட்ட தொகைக்கு என்ன என்ன பரிந்துரைகள் வருகின்ற என்று பார்த்துவிட்டு அதன் பிறகு மனதில் நினைக்கும் பல்வேறு தொகைகளுக்கு என்ன எல்லாம் பரிந்துரை வருகின்றன என்று அலசிப்பார்க்கலாம்.
வாழ்கையில் எல்லாமே பயனுள்ளதாக தான் இருக்க வேண்டுமா என்ற எண்ணத்தையும் இந்த தளம் ஏற்படுத்தக்கூடும். சும்மா ஜாலியாக செய்யக்கூடிய விஷயங்கள் வாழ்க்கையில் இல்லைய என்ன?அப்படி நினைத்தால் இந்த தளம் மனதை லேசாக்கிவிடலாம். இணையவாசிகள் தங்கள் பங்கிறகான யோசனைகளையும் இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.

எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்


எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
[ சனிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2011, 10:44.25 மு.ப GMT ]
திட்டமிடல் என்பது எல்லோருக்கும் தங்கள் பணிகளை சிறப்பாகவும் செவ்வனே செய்து கொள்ள உதவியாக அமைகிறது.
நாம் சில கருமங்களை செய்ய எண்ணி பின்னாளில் அதை மறந்து தொலைத்து விடுவதுண்டு. அதற்காகவே திட்டமிட்ட செயல்பாடுகளை பதிந்து வைத்து கொண்டால் நல்லது.
உங்களின் எதிர்கால பணி திட்டங்களை பதிவு செய்து கொள்ளவும். நீங்கள் பதிவு செய்த பணிகளை சிறப்பாக உரிய நேரத்தில் செய்து கொள்ளவும் வசதியளிக்கிறது COOLENDAR.COM என்ற தளம்.
இந்த தளத்தின் மூலம் இன்றைய நாள், எதிர்வரும் நாள், வாரம், மாதம் என எதிர்கால திட்டங்களை இலகுவாகவும் விரைவாகவும் பதிவு செய்து கொள்ள முடியும்.
அத்துடன் நீங்கள் குறித்த நாளில் செய்ய வேண்டிய பணிகளை உங்களின் கூகுள் டாக்(GOOGLE TALK ) மூலம் இந்த தளம் உங்களுக்கு அறியத்தருகிறது.
இந்த தளத்தின் வசதியினை பெற உங்களின் கூகுள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ள வேண்டும். இந்த தளத்தின் வசதிகள் ஆப்பிள் மற்றும் ANDROID செயலிகளாக உங்கள் ஆப்பிள் மற்றும் ANDROID சாதனங்களில் தரவிறக்கம் செய்ய முடியும்.

பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதிகள்


பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதிகள்
[ சனிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2011, 12:27.48 பி.ப GMT ]
Facebook தளம் என்பது இணையத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய தளம்.
தற்போது பேஸ்புக்கில் இன்னும் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது புதிய இரண்டு வசதிகளை காணலாம்.
Friend Lists: இதன் மூலம் நாம் தேவையான நண்பர்களின் செய்திகளை மட்டும் படிக்க முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் நம் நண்பர்களை சரியான List க்குள் நாம் சேர்க்க வேண்டும்.
Facebook ஆனது Default ஆக சில லிஸ்ட் கொண்டு இருக்கும். உதாரணமாக பெங்களூர் என்று ஒரு லிஸ்ட் அமைந்து உள்ளது என நினைத்துக் கொள்வோம். இதன் மூலம் நான் பெங்களூரில் உள்ள நண்பர்களின் Status மட்டும் தனியாக பார்க்க முடியும். இது போலவே மற்ற எல்லாம். இவற்றை மாற்ற நினைத்தால் Listபக்கம் சென்று மாற்றலாம்.
இதே போல குறிப்பிட்ட list நண்பர்களிடம் மட்டும் கூட நீங்கள் உங்கள் Status செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்.
Subscribe Option: இதுவரை நண்பர்களின் செய்திகளை மட்டுமே நாம் படித்து வந்தோம். ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர், நடிகைகள் போன்று நம் நண்பர்களாக இல்லாதவர் செய்திகளையும் இனி பெற முடியும்.
இதற்கு அவர்கள் subscribe என்பதை Activate செய்து இருக்க வேண்டும் அவ்வளவே. அவர்கள் Profile க்கு சென்று நீங்கள் subscribe செய்ய வேண்டும்.
நீங்கள் இதை activate செய்ய நினைத்தால்https://www.facebook.com/about/subscribe இங்கு செல்லவும்.
இன்னொரு விஷயம் ஏற்கனவே உங்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களுக்கு நீங்கள் subscribe செய்துள்ளதாக இருக்கும். உங்களை யாரெல்லாம் subscribe செய்துள்ளார்கள் என்று உங்கள் Profile பக்கத்தில் உங்கள் புகைப்படத்திற்கு கீழ் உள்ள subscribers Button மூலம் அறியலாம்.

குரோம் உலாவியில் கூகுள் ப்ளஸ் ஐகானை இணைப்பதற்கு


குரோம் உலாவியில் கூகுள் ப்ளஸ் ஐகானை இணைப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 07:46.37 மு.ப GMT ]
கூகுள் பிளஸ் வந்த வேகத்தில் அனைவரிடமும் நீங்காத இடம் பிடித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.
எளிமையான முகப்பு தோற்றமும் அதிகமான சேவையும் தான் மக்களை இதன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. குரோம் உலாவியில் எளிதாக கூகுள் பிளஸ் பயன்படுத்துவதற்காக புதிதாக ஒரு நீட்சி வந்துள்ளது.
பேஸ்புக்கிற்கு இணையான ஒரு சோசியல் நெட்வொர்க் கூகுள் தரப்பில் இருந்து வெளிவந்து அனைவராலும் பயன்படுத்தும்படி வளர்ந்து இருக்கிறது. கூகுள் பிளஸ் சேவையை நாம் குரோம் உலாவியில் ஒரே சொடுக்கிலிருந்து பயன்படுத்தலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு நீட்சி உள்ளது.
குரோம் உலாவியில் இத்தளத்திற்கு சென்று Install என்ற பொத்தனை சொடுக்கி எளிதாக நிறுவலாம். கூகுள் பிளஸ்(Google Plus) நிறுவி முடித்ததும் கூகுள் பிளஸ் ஐகான் நமக்கு உலாவியின் முகப்பில் தெரியும்.
இதில் நம் கூகுள் பிளஸ் கணக்கை திறந்து வைத்துக்கொள்ள வேண்டியது தான், இனி கூகுள் பிளஸ் தளத்திற்கு சென்று அவ்வப்போது யாராவது செய்தி பகிர்ந்துள்ளனரா என்றெல்லாம் தேட வேண்டாம்.
ஒரே இடத்தில் இருந்து எத்தனை பேர் கூகுள் பிளஸ்-ல் செய்தி அளித்துள்ளனர் என்ற எண்ணிக்கையை பார்க்கலாம், மேலும் படிக்க வேண்டும் என்றால் கூகுள் பிளஸ் ஐகானை சொடுக்கி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

MP3 கோப்புகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்வதற்கு


MP3 கோப்புகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 08:27.34 மு.ப GMT ]
இணையத்தில் பிரபல வீடியோ தளமான யூடியுப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த தளத்தில் லட்சக்கணக்கான வீடியோக்கள் குவிந்து காணப்படுகின்றன.
இதில் வாசகர்களும் தங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த தளத்தில் வீடியோ கோப்புகளை மட்டுமே பகிர முடியும். ஆனால் உங்களிடம் உள்ள ஓடியோவை மற்றவர்களுடன் யூடியூபில் பகிர ஒரு சுலபமான குறுக்கு வழி.
இதற்கு முதலில் இந்த தளத்தில் Mp3tou செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Choose Background Image பகுதியில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
அதில் உங்கள் வீடியோவில் தெரியவேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
புகைப்படம் அதிகபட்சம் 5MB மேல் இருக்க கூடாது JPEG  கோப்பாக இருக்க வேண்டும்.
புகைப்படத்தை தெரிவு செய்தவுடன் அந்த புகைப்படம் பதிவேற்றமாகி அந்த தளத்தில் சேர்ந்து விடும்.
அடுத்து Step 2 உள்ள Choose backsound file என்பதை கிளிக் செய்து உங்கள் MP3 பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதிக பட்சம் 35MB தான் இருக்க வேண்டும்.
MP3 கோப்பின் அளவை பொருத்து அது பதிவேற்றமாக நேரம் எடுக்கும் அதுவரை பொறுத்திருக்கவும். பதிவேற்றமாகி முடிந்ததும் ஒரு விண்டோ தோன்றும். அதில் உள்ள Go Create என்பதை கிளிக் செய்யவும.
Go Create கிளிக் செய்ததும் உங்கள் வீடியோ ரெடியாகும். அதில் இரண்டு லிங்க் இருக்கும் Download it என்பதை கிளிக் செய்தால் வீடியோ உங்கள் கணணியில் தரவிறக்கமாகி விடும்.
தரவிறக்கம் செய்த பிறகு யூடியுப் தளத்திற்கு சென்று upload பட்டனை அழுத்தி வீடியோவை யூடியூபில் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது இந்த தளத்தில் உள்ள Upload it to youtube லிங்கை கிளிக் செய்து நேரடியாக யூடியுப் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆனால் அந்த முறை பாதுகாப்பானது இல்லை என்பதாலும் நமது மின்னஞ்சல் முகவரிக்கு ஸ்பாம் மெயில்கள் அனுப்பப்படும் ஆபத்தும் உள்ளதால் அந்த முறையை உபயோகிக்க வேண்டாம்.

மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை தனித்தனியாக பிரித்தெடுப்பதற்கு


மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை தனித்தனியாக பிரித்தெடுப்பதற்கு
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 08:21.19 மு.ப GMT ]
மிகப்பெரிய கோப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்.
இவ்வாறுள்ள மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder ஆக நாம் விரும்பும் Size-ல் பிரிக்கலாம். மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக துண்டு துண்டாக பிரிக்க நமக்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. பிரிக்கும் Size -ஐயும் நாமே முடிவெடுக்கும் வண்ணம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தனை சொடுக்கி மென்பொருளை தரவிறக்கலாம். தரவிறக்கி மென்பொருளை இயக்கி நம்மிடம் இருக்கும் பெரிய அளவுள்ள கோப்புகளை Select Folder என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
Destination Folder என்பதில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து அடுத்து இருக்கும் By Size என்பதில் எவ்வளவு அளவுள்ள கோப்புகளாக பிரிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Files Should be என்ற ஆப்சனில் Copied என்பதையும் தேர்ந்தெடுத்து Split என்பதை சொடுக்கினால் போதும்.
உடனடியாக கோப்புகள் நாம் குறிப்பிட்ட இடத்தில் நாம் குறிப்பிட்ட அளவில் இதை அப்படியே சேமிக்கப்பட்டிருக்கும். இணையத்தில் சிறிய கோப்புகளாக பிரித்து அனுப்புபவர்கள் File type என்பதில் Zip அல்லது Rar என்ற ஆப்சனை தேர்ந்த்தெடுத்து Split செய்தும் அனுப்பலாம்.