Friday, April 29, 2011

பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்


பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்
[ திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011, 09:31.08 மு.ப GMT ]
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.
5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்.
சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.
புற்றுநோய் - 180 நாட்கள்.
காசநோய் - 90 நாட்கள்.

எந்தவித இணைய இணைப்பும் இல்லாமல் தகவல்களை பரிமாறிக் கொள்ள


எந்தவித இணைய இணைப்பும் இல்லாமல் தகவல்களை பரிமாறிக் கொள்ள
[ சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011, 07:20.42 மு.ப GMT ]
கணணியில் இணைய இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.
பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர். இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இணைய இணைப்பையும் பல கணணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.
Connectify என்ற இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணணியில் நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இணைய இணைப்பையும் வயர்கள் அல்லது கேபிள்கள் இல்லாமல் பல கணணிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம்.
இதற்கு உங்கள் கணணியில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணணியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முதலில்
1.கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.
2. நிறுவியதும் உங்கள் கணணியின் டாஸ்க்பாரின் வலதுபுறத்தில் மென்பொருள் ஐகானாக தோன்றும். அதை கிளிக் செய்தால் அதன் மெயின் விண்டோ திறக்கப்படும்.
3. Wi-fi Name: உங்கள் வயர்லெஸ் இணைப்பிற்கான பெயரைக் கொடுக்கவும். மற்ற கணணிகளில் அல்லது கருவிகளில் இந்த பெயர் தான் தெரியும்.
4. Password: மற்ற கணணிகள் உங்கள் இணையத்தை அணுக பாதுகாப்பான கடவுச்சொல்லைக் கொடுக்கவும். குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும்.
5. Internet: இதில் எந்த இணைய இணைப்பைப் பகிரப் போகிறீர்களோ அதைத் தேர்வு செய்யவும்.
6. Wi-Fi: இதில் உங்கள் கணணியின் வயர்லெஸ் அடாப்டரைத் தேர்வு செய்யவும்.
7. பின்னர் Start Hotspot என்பதைக் கிளிக் செய்தால் போதும். இந்த மென்பொருளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும்.
இதில் எத்தனை பேர் நமது இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை Connected Clients இல் பார்க்க முடியும். இதில் ஏற்கனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிரமுடியும்.
இந்த மென்பொருளை வீடு, கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு சிஸ்டத்தின் பயன்பாடு உயர்ந்தது: ஆய்வில் தகவல்


ஆண்ட்ராய்டு சிஸ்டத்தின் பயன்பாடு உயர்ந்தது: ஆய்வில் தகவல்
[ புதன்கிழமை, 23 மார்ச் 2011, 07:15.24 மு.ப GMT ]
உயர் ரக ஸ்மார்ட் போன் விற்பனையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஓப்பரேட்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட போன்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
இதுவரை கடந்த பத்து ஆண்டுகளாக நோக்கியா மட்டுமே இந்தப் பிரிவில் முதல் இடம் கொண்டிருந்தது. சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில் ஆண்ட்ராய்ட் ஓப்பரேட்டிங் சிஸ்டம் அதனை முறியடித்துள்ளதாக இது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் கேனலிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்ற காலாண்டில் 3 கோடியே 29 லட்சம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாகும். இது கூகுள் நிறுவனத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
வருங்காலங்களில் கணணியைக் காட்டிலும் ஸ்மார்ட் போன்களே இணைய இணைப்பிற்கும், பிற செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட இருப்பதால் கூகுள் தன் ஆண்ட்ராய்ட் ஓப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இன்னும் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற உள்ளது. 

கைத்தொலைபேசியை இனி காலணி மூலம் சார்ஜ் செய்யலாம் (வீடியோ இணைப்பு)


கைத்தொலைபேசியை இனி காலணி மூலம் சார்ஜ் செய்யலாம் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2011, 07:14.21 மு.ப GMT ]
வெளியில் பயணங்கள் செல்லும் போது மொபைல் போன் சார்ஜ் தீர்ந்து விட்டால் கைசேதப்படுகின்றவர்கள் இன்றைய உலகில் ஏராளம்.
அத்துடன் இன்றைய உலகில் மொபைல் போன் ஒரு அத்தியாவசியமான விடயமாகி விட்ட நிலையில் அதன் சார்ஜ் தீர்ந்து விடுவதென்பது கடும் சிக்கலான விடயம்.
அதனைத் தீர்க்கும் வகையில் ஐரோப்பாவின் முன்னணி மொபைல் கம்பனிகளில் ஒன்றான ஒரேஞ் போன் கம்பனி மொபைல் சார்ஜ் செய்யத்தக்க காலணியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அக்காலணியிலுள்ள விசேடம் யாதெனில் நீங்கள் நடக்கும் பொது உண்டாகும் வெப்ப சக்தியை மின்சார சக்தியாக மற்றும். இதன் மூலம் உங்கள் மொபைலை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஆனால் 1 மணிநேரம் சார்ஜ் செய்வதற்கு நீங்கள் 12 மணிநேரம் நடக்க வேண்டும். அதனை இன்னும் மேம்படுத்தி குறுகிய நேரத்தில் கூடுதலான சார்ஜ் செய்யத்தக்க வகையில் காலணியை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சிகளை ஒரேஞ் நிறுவன தொழில்நுட்பவியலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆயினும் மனிதர்களுக்கு உடற்பயிற்சியாகவும், மொபைல் போன் சார்ஜ் செய்து கொள்வதற்கு வழியாகவும் இருக்கும் காரணத்தால் இக்காலணிக்கு மவுசு அதிகரித்து வருகின்றது.

Win Mate: கணணியை சுத்தம் செய்வதற்கு


Win Mate: கணணியை சுத்தம் செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011, 04:09.44 மு.ப GMT ]
கணணியில் ஒவ்வொரு வேலை செய்வதற்கும் தனித்தனி மென்பொருளை நாடாமல் Win Mate என்ற மென்பொருளின் மூலம் பல்வேறு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யலாம்.
இதனை முதலில் உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின் பின்வரும் விண்டோ ஓபன் ஆகும்.
அதிலே Scan and Clean என்பதை கிளிக் செய்ததும் Pc Diagnosis, Junk Cleans, Trace Clean, Registry Clean, Duplicate File Scan ஆகிய Tabகள் காணப்படும்.
உங்களுக்கு தேவையான Tab ஐ தெரிவு செய்ததும் தானாகவே செயற்பாடு தொடங்கி விடும். அது போலவே Junk Clean Tabஐ கிளிக் செய்து தேவையற்ற கோப்புகளை டிக் செய்து அழிக்கலாம். Trace Clean, Registry Clean போன்றவற்றின் செயற்பாடும் Junk Clean Tab மாதிரி தான்.
Duplicate File Scan எனும் Tabஐ தேர்ந்தெடுத்தால் நம் கணனியில் உள்ள Duplicate Fileகளை அழிக்கலாம். அதற்கு கோப்பறைகளை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் Start Scan எனும் பட்டனை அழுத்த வேண்டும்.
Program Manager பகுதியிலே கணனியில் நிறுவியுள்ள ப்ரோகிராம்களை Uninstall செய்யலாம். General Tool என்பதிலே இருக்கும் Utilities என்பதிலும் பல்வேறு வசதிகள் காணப்படுகின்றது.

புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 5 அறிமுகம்


புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 5 அறிமுகம்
[ வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011, 10:57.58 மு.ப GMT ]
நாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது பிரவுசர்களாகும். நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுவது பயர்பொக்ஸ் உலவியாகும்.
இதில் பயர்பொக்ஸ் பிரவுசர் இரண்டாவது மிகப்பெரிய பிரவுசராகும். முதலிடத்தில் இருப்பது IE ஆகும். விண்டோஸ் கணணி வாங்கும் போதே இந்த IE பிரவுசரை நிறுவி கொடுப்பதால் தான் இந்த உலவி முதல் இடத்தில் உள்ளது. இல்லை என்றால் பயர்பொக்ஸ் தான் முதலிடத்தில் இருக்கும்.
சென்ற மாதம் தான் பயர்பொக்ஸ் 4 வெளியிடப்பட்டு இணைய தரவிறக்கத்தில் சாதனை நிகழ்த்தியது. இதுவரை இந்த பயர்பொக்ஸ் 4 உலவியை 112,923,144 பேர் தரவிறக்கம் செய்து உள்ளனர்.
வெளியிட்ட குறைந்த நாட்களிலேயே அதிகமானவர்களால் தரவிறக்கம் செய்யப்பட்ட இந்த மென்பொருள் தற்போது மேலும் பல வசதிகளை மேம்படுத்தி தனது புதிய பதிப்பான பயர்பொக்ஸ் 5 வெளியிட்டுள்ளது. ஆனால் இது முதலில் சோதனை(Beta) ஓட்டமாகவே விடப்பட்டுள்ளது.
இதன் வசதிகள்:
1. Firefox: விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா உபயோகிப்பவர்கள் பயர்பொக்சின் பிரவுசரில் உள்ள பட்டன்கள் புதிய மற்றும் சிறந்த தோற்றத்தை காட்டுகிறது.
2. HSTS: இந்த பயர்பொக்ஸ் 5ல் HSTS Protocol உதவியுடன் நம் பிரவுசரில் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இணைய திருடர்களிடமிருந்து நம் கணணி பாதுகாக்கப்படுகிறது.
3. Audio API: இணையத்தில் இருக்கும் மீடியா கோப்புகளை கையாள புதிய வசதியை கொடுத்துள்ளது.

சுனாமி ஏற்பட்டால் ஓடி வரும் ரோபோ


சுனாமி ஏற்பட்டால் ஓடி வரும் ரோபோ
[ வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011, 11:11.30 மு.ப GMT ]
மரவட்டை போன்றவற்றை புழு தொட்டால் திடீரென உடலை சுருட்டிக் கொள்ளும். எதிரி விலகிவிட்டார் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட பிறகு தான் உடலை பழைய நிலைக்கு கொண்டு வரும்.
இதனை அடிப்படையாக வைத்து "புழு ரோபோ" ஒன்றை உருவாக்கியுள்ளனர் அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலத்தில் உள்ள டப்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது: சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம் போன்றவற்றில் நேரடியாகவும் இடிபாடுகளிலும் ஏராளமானோர் சிக்குகின்றனர். சிக்கியவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு இடிபாடுகளை அகற்றுவது கடினமாக உள்ளது.
இத்தகைய சூழலை இந்த புழு ரோபோ எளிதாக சமாளிக்கும். சிறு துளை வழியாக உள்ளே நுழையும். பாதிக்கப்பட்டவர்களை தன் சிலிகான் ரப்பர் உடலுக்குள் பத்திரமாக வெளியே தூக்கி வரும்.
முதல்கட்டமாக 4 இஞ்ச் நீளமுள்ள புழு ரோபோவை உருவாக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளோம். இதற்கு "கோ க்யூ போட்" என்று பெயர் வைத்துள்ளோம். மீட்பு பணிகளில் ஈடுபடுகிற வகையிலான பெரிய அளவிலான ரோபோக்களை உருவாக்கும் பணி கடைசிகட்ட ஆய்வுக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி


மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி
[ சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011, 04:02.05 மு.ப GMT ]
மக்களிடையே தொடர்புக்கு மிகவும் அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது.
அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்க அவசியமாகிறது. குறைந்தபட்சமாக தாய்மொழி, தேசியமொழி, உலகப்பொதுமொழி ஆகியவற்றையாவது அறிந்திருக்க வேண்டும்.
சிலர் பொது இடங்களில் பலமொழிகளை பேசி அசர வைப்பார்கள். பலர் தாய்மொழியைத் தவிர மற்றமொழி தெரியாமல் விழி பிதுங்க நிற்பார்கள். படித்த சிலர்கூட பொது இடங்களில் இருக்கும் அறிவிப்புகள் வேறு மொழியில் இருந்தால் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற மொழிப் பாடங்கள் சிரமமாக இருக்கும்.
இவர்களுக்கு உதவும் வகையில் மொழிபெயர்க்கும் கண்ணாடி வந்திருக்கிறது. இந்த மூக்குக்கண்ணாடியுடன் இணைந்து ஒரு டிரான்ஸ்லேட்டர்(மொழிபெயர்க்கும்) கருவி இருக்கும். இது ஒரு கமெராவும், மைக்ரோ போனும் இணைந்த கருவியாகும்.
இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு நீங்கள் வாசிக்கும் போது மைக்ரோபோன் வேலை செய்து அதை மெமரி கருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத் தெரியும் படியாக காட்டப்படும்.
இதனால் நீங்கள் எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்து அறிந்து கொள்ள முடியும். இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது.
ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவே இதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

விண்டோஸ் எக்ஸ்பியில் பிழை செய்தி வராமல் இருக்க


விண்டோஸ் எக்ஸ்பியில் பிழை செய்தி வராமல் இருக்க
[ சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011, 03:53.42 மு.ப GMT ]
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் அனைவருமே ஏதாவது பிழை செய்தியினை நாள்தோறும் சந்திக்கும் நிலை ஏற்படும்.
விண்டோஸ் இயக்கத்தில் எங்கு பிரச்சனை உள்ளது என்று இந்த செய்திகள் நமக்குக் காட்டுகின்றன என்பது தெரியாது. சற்று விபரம் புரிந்தவர்கள் அதனைப் படித்து புரிந்து அதற்கேற்ற வகையில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
பலர் இங்கே பிழை இருக்கின்றது தெரிந்து என்ன செய்ய? இது போல செய்திகள் வராமல் இருந்தாலே நல்லது என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற செய்திகள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளைப் பார்க்கலாம்.
1. ஸ்டார்ட் மெனுவில் My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.
2. அடுத்து மெனுவில் System Properties விண்டோ திறப்பதற்காக Properties பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்திடவும்.
4. இந்த அட்வான்ஸ்டு டேப்பில் கிடைக்கும் விண்டோவில் Error Reporting என ஒரு பட்டன் கிடைக்கும்.
5. இப்போது Error Reporting விண்டோ கிடைக்கும். பின் இதில் Disable Error Reporting என்று இருப்பதனை டிக் செய்திடவும். இதனைக் கிளிக் செய்தால் அனைத்து பிழை செய்திகளும் காட்டப்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் உள்ள பிழை செய்திகள் காட்டப்படும். எதுவும் வேண்டாம் என்று நினைத்தால் But notify me when critical errors occur என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள்.
6. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி பிழை செய்திகள் நீங்கள் செட் செய்தபடி மட்டுமே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் இருக்கும்

உங்களின் தட்டச்சு வேகத்தை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள


உங்களின் தட்டச்சு வேகத்தை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள
[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 10:21.04 மு.ப GMT ]
ஓன்லைன் மூலம் தட்டச்சு செய்ய கற்று கொடுக்க பல தளங்கள் இருந்தாலும் நாம் தட்டச்சு செய்யும் வேகம், அதில் எத்தனை தவறு இருக்கிறது என்று எளிதாக துல்லியமாக சொல்ல ஒரு தளம் உள்ளது.
கணணி பயன்படுத்தும் நண்பர்கள் தாங்கள் கணணியில் எவ்வளவு வேகத்தில் தட்டச்சு செய்கிறீர்கள் என்று கேட்டால் அதை எப்படி கணக்கிடுவது என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர்.
இவர்களுக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இந்தத் தளத்திற்கு சென்று Start என்ற பொத்தானை சொடுக்கவும். அதன் பின் வார்த்தைகளை தட்டச்சு செய்ய வேண்டியது மட்டும் தான் நம் வேலை நாம்.
தட்டச்சு செய்து முடித்ததும் நிமிடத்திற்கு நாம் தட்டச்சு செய்த வார்த்தைகளின் வேகம் என்ன என்பதையும், எத்தனை பிழை செய்திருக்கிறோம் என்பதையும் கூடவே Accuracyம் காட்டுகிறது இந்த தளம்.

கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்


கைத்தொலைபேசி பயனாளர்களுக்கான சில ஆலோசனைகள்
[ புதன்கிழமை, 06 ஏப்ரல் 2011, 07:16.45 மு.ப GMT ]
கைத்தொலைபேசியை தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும், அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
இருப்பினும் கைத்தொலைபேசி இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மை தான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல் சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.
இயலுமானால் உங்கள் உடம்பிலிருந்து கைத்தொலைபேசியை சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர்வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன.
கைத்தொலைபேசியை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடைய வேண்டும் என்ற முயற்சியில் கதிர்வீச்சு அதிகமாகும்.
பேசும் போது கைகளால் அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். கைத்தொலைபேசியில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து கைத்தொலைபேசியிலும் இருக்கும்.
இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
கைத்தொலைபேசியில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும். கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் கைத்தொலைபேசியை பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.
கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும். அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம்.
மருத்துவமனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
விமானத்தின் உள்ளேயும் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் அணைத்து வைப்பது நல்லது.
சிறுவர்கள் அதிக நேரம் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.

அழகான புகைப்பட வடிவமைப்பிற்கு உதவும் இணையம்


அழகான புகைப்பட வடிவமைப்பிற்கு உதவும் இணையம்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 07:36.15 மு.ப GMT ]
அனைவருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்றும், மற்றவர்களை அது கவர கூடியதாய் அமைய வேண்டும் என்றும் எண்ணம் உண்டு.
புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில் வடிவமைப்பதற்கு ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. LOONA PIX.COM: இதில் புகைப்படங்களை பல வழிகளில் வடிவமைக்கலாம். போட்டோ பிரேம், அனிமேஷன், காலண்டர் பின்னணியிலும் வடிவமைக்கலாம்.
இத்தளத்தில் வடிவமைக்கப்படும் புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இத்தளத்தில் இருந்தே அனுப்பலாம்.
2.LUNA PIC: இந்த தளமானது ஒரு ஓன்லைன் போட்டோ எடிடர் ஆக காணப்படுகிறது. இத்தளத்தில் Edit Your Profile Picture For Face Book, Animation, Rotating Cube, Add Text இவற்றுடன் பெயிண்டிங் வசதியும் உண்டு.
3. FLAUNT R: இந்த தளத்தில் 1000க்கு மேற்பட்ட போட்டோ அனிமேஷன் உள்ளது. இந்த தளத்தில் இருந்து 30க்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான Profile புகைப்படத்தை வடிவமைக்க முடியும்.

ஓசோன் ஓட்டையால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள்


ஓசோன் ஓட்டையால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 10:30.45 மு.ப GMT ]
பருவ நிலை மாற்றங்களுக்கு ஓசோனில் விழும் ஓட்டைகள் முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த ஓசோன் துளைகள் பூமியின் தென் துருவப் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த ஆய்வு அறிக்கை அறிவியல் பத்திரிக்கையின் 21வது இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கொலம்பியா பல்கலைகழகத்தின் ஸ்கூல் ஆப் இன்சினியரிங் ஆய்வாளர்கள் ஓசோன் ஓட்டையால் துருவப் பகுதி பாதிப்பை விளக்கி உள்ளனர்.
பூமிப்பகுதியானது வடதுருவம், தென்துருவம் என ஒரு கற்பனைக் கோடு மூலம் பிரிக்கப்படுகிறது. இதில் ஓசோன் படல ஓட்டையால் தென் துருவ அரை வட்டப் பகுதி முழுவதும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பாதிப்பால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சூரியனில் இருந்து தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களை ஓசோன் படலம் உறிஞ்சுகிறது. இதனால் பூமியில் உள்ள உயிர்களுக்கு அபாயம் ஏற்படாத நிலை இருந்தது. கடந்த அரை நூற்றாண்டாக மனிதர்களால் உற்பத்தி ஆன அதி நவீன பொருட்களால் ஓசோன் மண்டலம் பாதிக்கப்படுகிறது.
1989ம் ஆண்டு மாண்ட்ரீல் ஒப்பந்தப்படி குளோரோ ப்ளோரசண்ட் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மாண்ட்ரீல் ஒப்பந்தத்தில் தற்போது வரை 196 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத நேரத்தில் ஓசோன் படலம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி மனித சுதந்திரத்திற்கு தடை போடும் புதிய தொழில்நுட்பம்: ஐபோனின் அடுத்த பரிணாமம்


தனி மனித சுதந்திரத்திற்கு தடை போடும் புதிய தொழில்நுட்பம்: ஐபோனின் அடுத்த பரிணாமம்
[ வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011, 10:38.44 மு.ப GMT ]
வெளியே சென்று சிறிது நேரம் தாமதம் ஆனாலே ஏன் இவ்வளவு தாமதம்? எங்கு சென்றீர்கள்? என்று ஆயிரம் கேள்விகள் கேட்கப்படும்.
சொன்னால் தானே பிரச்சனை ஆகிவிடுமே. அதனால் "ஓபீசில் ஓவர் டைம்" என்று சமாளிப்பவர்கள் உண்டு. ஆனால் ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்கள் இப்படி சொல்ல முடியாது.
காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டது முதல் மாலையில் வீடு வந்து சேர்கிற வரையில் எங்கெங்கு போனோம் என்பதை ஐபோனில் உள்ள "டிராக்கர்" வசதி தெரிவித்து விடும்.
இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பேசுவது, எஸ்.எம்.எஸ் மட்டுமின்றி கமெரா, மீடியா பிளேயர் மற்றும் 3ஜி இணைப்புகள், ஜிபிஎஸ் வசதி, இமெயில், இணையம் உள்பட பல்வேறு வசதிகள் கொண்டவை ஸ்மார்ட்போன்கள்.
உலக அளவில் இதில் முன்னணியில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன். இதில் ஜிபிஎஸ் உதவியுடன் செயல்படும் "டிராக்கர்" என்ற மென்பொருள் உள்ளது. ஐபோன் எந்த இடத்தில் இருக்கிறது என்பது இதன் உதவியுடன் தொடர்ந்து பதிவாகும்.
எத்தனை மணிக்கு எந்த இடத்தில் ஐபோன் இருந்தது என்பது நமது கணணியில் நிமிட வாரியாக தானாக பதிவாகிவிடும். ஏறக்குறைய டைரி போல இதை பயன்படுத்த முடியும். இந்த வசதி வேண்டாம் என்று மறுக்க முடியாது.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்களது இருப்பிடம் பற்றிய அனைத்து தகவல்களும் கணணியில் சேகரமாகிக் கொண்டே இருக்கும். வேண்டாத நண்பர்களோ, வெறுப்பில் இருக்கும் மனைவியோ இதன் மூலம் உங்களை உளவு பார்க்க முடியும்.
தனிப்பட்ட வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் இந்த வசதியை ஐபோன் ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.


இணையப் பக்கங்களை PDF போர்மட் கோப்பாக சேமிக்க


இணையப் பக்கங்களை PDF போர்மட் கோப்பாக சேமிக்க
[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 07:37.13 மு.ப GMT ]
இணையதளங்களை பார்வையிடும் பொழுது சில தேவைகளுக்காக அதை சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் உபயோகமாக இருக்கும் என்று சிலர் கருதுவதுண்டு.
ஆனால் இணைய பக்கங்களை சேமிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம். இணைய பக்கங்கள் மட்டுமல்லாமல் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் அதை PDF வடிவில் சேமிக்க ஓர் அருமையான இலவச மென்பொருள் உள்ளது.
Primo Pdf எனப்படும் இந்த மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். எந்த இணைய பக்கத்தை PDFஆக சேமிக்க வேண்டுமோ அந்த பக்கத்தை திறந்து கொண்டு File மெனுவில் Printஐ அழுத்த வேண்டும்.
பின் ஓபன் ஆகும் விண்டோவில் Primo Pdf  என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதன் பிறகு Create PDFஐ அழுத்த வேண்டும்.
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இணைய பக்கமானது Pdf ஆக சேமிக்கப்பட்டிருக்கும். PDF உருவாவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் Save Asல் Specific Folder என்பதை தேர்ந்தெடுக்கவும்.

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப


எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப
[ வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011, 03:46.56 மு.ப GMT ]
கணணியில் உள்ள கோப்புகளை இணையம் வழியாக இலவசமாக அனுப்புவதற்கு பல தளங்கள் உண்டு.
ஆனால் பாதுகாப்பாகவும், எளிதாகவும் அனுப்புவதற்கு ஒரு இணையதளம் உதவி செய்கிறது. கோப்புகளை மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நாம் உடனடியாக செல்லும் இணையதளம் Rapidshare, megaupload தான். இன்னும் எண்ணற்ற தளங்கள் உண்டு.
இந்தத் தளங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில் நீங்கள் பணம் கொடுத்த பயனாளராக இருந்தால் வேகமாகவும், இல்லை இலவசமாக என்றால் வேகம் குறைவாகவும் தான் தரவிறக்கம் ஆகும்.
இது மட்டுமின்றி ஆங்காங்கே விளம்பரங்கள் வந்து நம்மை தொல்லை கொடுப்பதும் உண்டு. இப்படி அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி எளிதாக கோப்புகளை பதிவேற்றம் செய்யவும் தரவிறக்கவும் நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இத்தளம் பார்ப்பதற்கு மட்டுமல்ல இதன் சேவையும் எளிதாகவும் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் உள்ளது. இத்தளத்திற்கு  இடது பக்கம் இருக்கும் Read more என்பதை சொடுக்கி நாம் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்ற இரண்டையும் கொடுத்து ஒரு புதிய பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம்.
அடுத்ததாக Select Files என்ற பொத்தானை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்ய வேண்டிய கோப்புகளை குறிப்பிட வேண்டும். பதிவேற்றிய பின் கிடைக்கும் இணையதள முகவரியை சேமித்து யாருக்கு இந்த கோப்பை அனுப்ப வேண்டுமோ அவருக்கு இந்த முகவரியை அனுப்பினால் போதும். அவர் இந்த முகவரியை சொடுக்கி எளிதாக நாம் பதிவேற்றம் செய்த கோப்புகளை தரவிறக்கலாம்.