Friday, September 24, 2010

திருட முடியாத ஐபோன்

ஒருவருக்கு உரிமையான ஐ–போனை அடுத்தவர் பயன்படுத்த முடிந்தால், கண்டறிந்து இயங்காமல் இருக்கக் கூடிய தொழில் நுட்பத்தினை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து, அதன் காப்புரிமைக்கு மனுச் செய்துள்ளது.
இந்த தொழில் நுட்பம் ஐ போன் ஒன்றின் உரிமையாளரின் முக அமைப்பு, குரல் மற்றும் இதயத் துடிப்பினை அளந்து அறிந்து கொள்கிறது. இவற்றின் அடிப்படையில் பல செயல்பாடுகளை, ஆப்பிள் நிறுவன சர்வர் மேற்கொள்கிறது.

வேறு எவரும் பயன்படுத்த முயற்சிக்கையில் போனின் செயல்பாட்டை முடக்குகிறது. திருட்டுத்தனமாகப் பயன்படுத்துகையில், பயன்படுத்தும் இடத்தினை அறிந்து கொண்டு பதிந்து கொள்கிறது.

அனுமதிக்கப்பட்ட கூடுதல் வசதிகளை மட்டுமே பயன்படுத்த வழி தருகிறது. ஐபோனின் வரையறைகளை திருட்டுத்தனமான சாப்ட்வேர் (ஜெயில் பிரேக்கிங்) மூலம் யாரேனும் மாற்றி இருந்தால் உடனடியாகக் கண்டறிந்து பயன்பாட்டினை முடக்குகிறது.

ஆனால் இந்த தொழில் நுட்பம் வாடிக்கையாளர்களின் தனி நபர் உரிமையில் தலையிடுவதாக சிலர் கண்டித்துள்ளனர்.

Wednesday, September 22, 2010

சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் அமெரிக்கா தயாரிக்கிறது

பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க ராணுவம் பல புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வானில் பறந்தபடியே உளவு பார்ப்பதற்காக அதிநவீன விமானத்தை தயாரித்து வருகிறது.
அது “போயிங்” ரக விமானத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.440 கோடி செலவில் இந்த விமானம் தயார் செய்யப்படுகிறது.

இது ஆளில்லாமல் சூரிய சக்தி மூலம் தானாக இயங்க கூடியது. இதற்கு “சோலார் ஈகிள்” (சூரிய கழுகு) என பெயரிடப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் இது சூரிய ஒளியை உறிஞ்சி சேமித்து வைத்து கொள்ளும்.

அதன் மூலம் இரவு நேரத்திலும் கூட தொடர்ந்து பறக்கும். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கருவிகள் போட்டோ எடுத்து அதன் மூலம் தகவல்களை அமெரிக்க ராணுவத்துக்கு அனுப்பும்.

விமானத்தில் சக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் “புரோபல் லர்கள்” (உந்து விசை கருவிகள்) பொருத்தப்பட உள்ளன. இதை ஆளில்லா விமானம் ஆகவும், போர்க்காலங்களில் இதை பயன்படுத்தவும் முடிவும். அடுத்த ஆண்டு (2011) இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.