Monday, September 19, 2011

குளோனிங் முறையில் முதன் முதலாக பூனைகள் உருவாக்கம்


குளோனிங் முறையில் முதன் முதலாக பூனைகள் உருவாக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 13 செப்ரெம்பர் 2011, 12:26.02 பி.ப GMT ]
உலகில் முதன் முறையாக குளோனிங் முறையில் ஆடுகள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது பூனைகள் உருவாகியுள்ளன.
அமெரிக்காவில் மின்னெ சோபாவில் உள்ள மயோ கிளினிக் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் இச்சாதனை படைத்துள்ளனர். இது மனிதர்களை தாக்கும் உயிர்க்கொல்லியான "எய்ட்ஸ்" நோய்க்கு இணையானதாகும்.
இந்த பூனைகளின் பச்சை நிறம் ஒளிரும் ஜெல்லி மீன்களில் இருந்து எடுத்து செலுத்தப்பட்ட மரபணுவாகும். இதுதான் பூனைகளின் உடலில் பச்சை நிறத்திலான புரோட்டீனை உருவாக்கி ஒளிர செய்கின்றன.
இந்த பூனைகள் மரபணு மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள பெரும்பாலான மரபணு குரங்கில் இருந்து எடுத்து செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு டிரிம்ஷிப் என்று பெயர். இவை விலங்குகளை தாக்கும் எப்.ஐ.வி எனப்படும் வைரஸ் தொற்றுநோயில் இருந்து இவற்றை பாதுகாக்கும்.
குளோனிங் முறையில் 3 பூனைகள் பிறந்துள்ளன. அவற்றுக்கு டிஜிகேட் 1, டிஜிகேட் 2, டிஜிகேட் 3 என பெயரிட்டுள்ளன. அவை பச்சை நிறத்தில் உள்ளன. இந்த ஆராய்ச்சியின் மூலம் மனிதர்களை எய்ட்ஸ் நோயில் இருந்து காப்பாற்றும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பூனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள மரபணுக்களால் அவற்றுக்கு எப்.ஐ.வி வைரஸ் நோய் தாக்கும் வாய்ப்பு இல்லை. அதுபோன்று எச்.ஐ.வி வைரஸ் கிருமிகளில் இருந்து மனிதர்களை பாதுகாக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.

No comments:

Post a Comment