Friday, March 18, 2011

குறுக்கே யாராவது வந்தால் தானாக நின்று விடும் கார் (வீடியோ இணைப்பு)


[ வெள்ளிக்கிழமை, 04 மார்ச் 2011, 08:18.12 மு.ப GMT ]
உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்துகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் முடிவாக ஒரு உபகரணம் ஒன்றை வொல்வோ நிறுவனத்தார் உருவாக்கியுள்ளனர். இது பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன், அவை மோதலாம் என்ற நிலை வரும் போது எச்சரிக்கை சமிக்ஞைகளை எழுப்பும்.
இது மட்டுமல்லாமல் உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் முடியும் படி இதனை தயாரித்துள்ளனர். இதனை தனது கார்களில் பொருத்தி, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளும் வெற்றியடைந்துள்ளன.
ராடார் மற்றும் கேமரா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காரானது முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை இணங்கண்டு கொள்கின்றது. அவற்றின் மீது கார் மோதலாம் என்ற நிலையில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்படும். அதை சாரதி பொருட்படுத்தாத நிலையில் கார் தானாக நிறுத்தப்படும்.
எனினும் இவ்வுபகரணமானது இரவிலும் மோசமான காலநிலையின் போதும் இயங்காது என வொல்வோ தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment